+2 தேர்வில் நாமக்கல் சுஷ்மிதா முதலிடம்-3 இடங்களும் நாமக்கல்லுக்கே!!

2வது இடமும் நாமக்கல்லுக்கே
அதே நாமக்கல்லைச் சேர்ந்த எஸ்.கே.வி மேல்நிலைப்பள்ளி கார்த்திகா, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அசோக்குமார், நாமக்கல் விவேகானந்தா பள்ளி மாணவர் மணிகண்டன் ஆகியோர் 1188 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
3வது இடமும் நாமக்கல்லுக்கே
அதேபோல மூன்றாவது இடத்தையும் நாமக்கல் மாணவர்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த வித்யா விகாஷ் பள்ளி மாணவி மகேஸ்வரி, நாமக்கல் எஸ்.கே.வி. பள்ளி மாணவி பிரபாசங்கரி ஆகியோர் 1187 மதிப்பெண்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களையும் நாமக்கல் மாணவர்களேப் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளனர்.
பிளஸ் டூ தேர்வு கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8.22 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3.53 லட்சம் பேர் மாணவர்கள். 4.07 லட்சம் பேர் மாணவிகள். 61,319 பேர் தனித் தேர்வர்களாகவும் தேர்வு எழுதினர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இந்தப் பணியில் சுமார் 35,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணி ஏப்ரல் 30ம் தேதி முடிவடைந்தது.
இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ- மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளை உங்கள் ஒன்இந்தியா தமிழ் இணையத்தளத்தில் (http://www.careerindia.com/results/) காணலாம்.
மேலும் www.tnresults.nic.in, www.dge1.nic.in, www.dge2.nic.in, www.dge3.nic.in, www.tn.pupliclibraries.gov.in ஆகிய அரசு இணையதளங்களிலும் காணலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications