தமிழ்நாட்டில் கோடை மழை இன்றும் தொடரும்
சென்னை: தமிழகத்தின் கோடையின் உக்கிரமான அக்னி நட்சத்திரம் தொடரும் நிலையில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்றும் பல இடங்களில் பரவலாக மழை பெயதது.
வால்பாறையில் 5 செ.மீ. மழையும், வேலூர், சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும், அறந்தாங்கி, மானாமதுரை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
சென்னையில் பகலில் வெயில் கடுமையாக அடித்தது. வீடுகளிலும் மின்விசிறிகளும் வெயிலை வெளிப்படுத்தின. மாலை 3 மணிக்குப் பிறகே மெதுவாக மெரினா கடற்கரையில் கூட்டம் கூடியது.
பகல் நேரத்தைப் பொறுத்தவரையில் சென்னை சாலைகள் வெறிச்சோடியே கிடக்கின்றன.
இதனிடையே தமிழ்நாட்டில் சில இடங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் என்றும் சென்னையில் மழை மேகங்கள் மாலையில் உருவாகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications