பாஜக-நிதின் கத்காரியின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பு என்பது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உரியது. தொடர்ந்தும் ஒருவர் தலைவர் பதவியில் நீடிக்க முடியாது. இடைவெளிவிட்டுத்தான் பதவியேற்க முடியும்.
நிதின் கத்காரியைப் பொறுத்தவரையில் மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா, அருண்ஜேட்லி, யஷ்வந்த் சின்ஹா எனப் பலரும் கத்காரி மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்தும்கூட வெளிநாடு வாழ் தொழிலதிபருக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை தாரை வார்க்க முயற்சித்தது, இந்த குழப்பத்தால் மூத்த பாஜக தலைவர் அலுவாலியா தோற்றது, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என அழைக்கப்படுவோரில் ஒருவரான மோடிக்கு செக் வைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேலை களமிறக்கியது. உத்தரப்பிரதேசத்தில் மோடியின் தீவிர எதிர்ப்பாளரான சஞ்சய் ஜோஷியை தேசிய செயலராக்கியது, கர்நாடக பாரதிய ஜனதாவின் எதியூரப்பாவுக்கு எதிரான அனந்தகுமாரின் கலகங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது என கத்காரியால் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள்.
இதனால் மும்பை தேசிய செயற்குழுக் கூடத்தில் கத்காரி தொடர்ந்தும் தலைவராக நீட்டிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி இருந்தது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆதரவு இருந்ததால் மேலும் 3 ஆண்டுகாலத்துக்கு தலைவர் பதவியில் கத்காரி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அக்கட்சியின் சட்டத்தில் திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மீண்டும் சஞ்சய் ஜோஷி
தேசியச் செயலர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட சஞ்சய் ஜோஷி, 2014- ம் ஆண்டு நாசிக் தொகுதியில் போட்டியிட உள்ள கத்காரியின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட கட்சி அனுமதி அளித்துள்ளது. முதல் முறையாக கத்காரி தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications