கலெக்டர் சகாயத்தைத் தொடர்ந்து மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கும் இடமாற்றம்
சென்னை: மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் காவல்துறை கண்காணிப்பாளரான அஸ்ரா கார்க்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் சகாயம் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோர் ரவுடிகளின் அட்டகாசங்களை ஒடுக்கி மதுரை மக்களுக்கு சற்றே ஆறுதலைத் தந்து வந்தனர்.
இந்நிலையில் ஆட்சியர் சகாயம் திடீரென இட மாற்றம் செய்யப்பட்டார். அவரை தூக்கி அடித்து கோ ஆப்டெக்ஸ் துறைக்கு மாற்றினர். இப்போது காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கை திருப்பூருக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
அதேப்போல, திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் அழகிரியின் தயா பார்க் விவகாரம். நித்யானந்தா விவகாரம் என பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இவர்களது மாற்றத்தின் பின்னணி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications