கருணாநிதியைச் சந்திக்க விரும்பும் ராசா... அனுமதி கோரி கோர்ட்டில் விண்ணப்பிக்கிறார்!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கைதான முதல் நபர் ராசா. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்து வந்த ராசா, இந்த வழக்கில் சிக்கி கைதான கனிமொழி உள்ளிட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்ட நிலையில் கடைசி ஆளாக ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.
ஏப்ரல் 15ம் தேதி ஜாமீனில் விடுதலையான ராசா, டெல்லியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ளார்.எனவே தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது கருணாநிதியைச் சந்திக்க ராசா விரும்புகிறார். கருணாநிதிக்கு ஜூன் 3ம் தேதி பிறந்த நாள் வருகிறது. எனவே அன்று அவரை சந்தித்து வாழ்த்து கூறவும் ஆசி பெறவும் அவர் விரும்புவதாக தெரிகிறது. இதற்காக தான் சென்னைக்குச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி கோர்ட்டை அணுக அவர் திட்டமிட்டுள்ளாராம்.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையான போது சென்னைக்கு வந்த போது மிகப் பிரமாண்டமான வரவேற்பை திமுக அளித்தது. அதேபோல ராசாவும் சென்னைக்கு வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications