இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தேர்வு
மட்டக்களப்பு : இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 14-வது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நேற்று தொடங்கியது. மாநாட்டையொட்டிய பொதுச்சபைக் கூட்ட்டத்தில் தலைவர் மற்றும் இதர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் ஆண்டறிக்கையை செயலாளர் மாவை சேனாதிராசா தாக்கல் செய்தார்.
இவர்களுடன் 8 மாவட்டங்களுக்கு துணைத் தலைவர்களும், 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று நடைபெற உள்ள பேராளர்கள் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள்:
-வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு ஊடாக தீர்வு காணப்படவேண்டும். முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் அங்கீகரிப்பதாக அந்தத் தீர்வு அமையவேண்டும்.
- சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீட்டை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும்.
- புலம்பெயர்ந்த மக்கள் இங்கு நடைபெறும் புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி, நிபுணத்துவ உதவி ஆகியவற்றை வழங்க வேண்டும். இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இங்கு நடைபெறும் அரசியல் போராட்டங்களுக்கு தமது ஆதரவை புலம்பெயர்ந்த மக்களும் வழங்க வேண்டும்.
- உரிமைகளை வெற்றெடுப்பதற்கு நடத்தப்படும் போராட்டத்துக்கு எமது மக்கள் முழுமையான ஆதரவை வழங்கி ஒத்துழைக்க வேண்டும். அத்துடன் முற்போக்கு சக்திகளும், முஸ்லிம் சமூகம் உள்ளிட்டோரும் போராட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications