பிரதமருக்கு ஜெ. எழுதிய கடிதத்தின் எதிரொலி: அணையின் துளைகளை அடைக்க கேரள அரசு அனுமதி
Subscribe to Oneindia Tamil

முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை அறிய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவர் குழு அணையில் துளையிட்டு மாதிரி மண் எடுத்து பலத்தை சோதித்தது. அதன் பிறகு அணையில் போட்டப்பட்ட துளைகளை அடைக்குமாறு அந்த குழு உத்தரவிட்டது. துளைகளை அடைக்க முயன்ற தமிழக அதிகாரிகளை தங்கள் பணியைச் செய்ய விடாமல் கேரள அரசு தடுத்து வந்தது.
இதையடுத்து தமிழக அதிகாரிகள் தங்கள் பணியைச் செய்ய கேரள அரசு தடைபோடக் கூடாது என்று அதை வலியுறுத்துமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். மத்திய அரசு அவ்வாறு கேரளாவை வலியுறுத்தாவிட்டால் அணையின் பாதுகாப்புக்கு தமிழக போலீசாரை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அணையில் போடப்பட்ட துளைகளை அடைக்க தமிழக அதிகாரிகளுக்கு கேரள அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications