மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிரவாதிகள் மாதிரி பேசுகிறார்கள்: மோடி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட சிபிஎம் செயலாளர் எம்.எம். மணி அரசியல் கொலைகள் பற்றி பேசியுள்ளார். அரசியல் எதிரிகளை அக்கட்சி கொலை செய்த சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில்,
எங்களின் அரசியல் எதிரிகளை கொலை செய்வோம் என்று ஒரு அரசியல் கட்சி தலைவர் கூறுகிறார் என்றால் அது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மனித உரிமை ஆணையம் எங்கே போனது? இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். இதை எல்லாம் கேட்டுவிட்டு மத்திய அரசு என்ன தூங்கிக் கொண்டிருக்கிறதா? இந்த விவகாரம் குறித்து கேரள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?
சிபிஎம் தலைவர் தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகள் போன்றல்லவா பேசுகிறார் என்றார்.
அரசியல் கொலைகள் பற்றிய எம்.எம். மணியின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிபிஎம் கட்சியினரின் வன்முறை அரசியல் வெளிச்சத்திற்கு வந்து விட்டதாக காங்கிரஸ் மற்றும் பாஜக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications