கடந்த ஓராண்டில் மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை: மமதா குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கடந்த ஓராண்டாக மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா நிதியுதவி கூட வாங்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தனது மாநிலத்திற்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதே இல்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமதா பானர்ஜி கூறியதாவது,

கடந்த ஓராண்டு முதல் இன்றைய தேதி வரைக்கும் மத்திய அரசிடம் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அதனால் மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. எனது அரசின் ஆண்டு வருமானம் ரூ.21,000 கோடி. ஆனால் கடனை அடைக்க மட்டும் ரூ.22,000 கோடி செலவு செய்கிறோம். இத்தனை நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

மாநில அரசு தனது சொந்த செலவில் 7 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகள் மற்றும் பயிர் காப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். மேற்கு வங்கம் பிரகாசி்ககும் நாள் வரும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+