கணவர் ஏசி வாங்கி தராத ஏமாற்றத்தில் மனைவி தற்கொலை
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கணவர் வீட்டிற்கு ஏசி எந்திரம் வாங்கி தர மறுத்ததால், மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெங்கால் காலனியில் வசித்து வந்தவர் பினா தாஸ்(32). ஜாம்ஷெட்பூரில் அதிகளவில் ஸ்டீல் தொழிற்சாலைகள் இருப்பதால், அப்பகுதியில் கடும் வெப்பம் நிலவுகிறது.
இதையடுத்து பினா தாஸ் வீ்ட்டிற்கு ஏசி எந்திரம் வாங்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக அவரது கணவரிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் கையில் பணம் இல்லாததால் பினா தாஸின் கணவர் அதை கண்டு கொள்ளவில்லை. வீட்டிற்கு ஏசி வாங்குவது குறித்து நேற்று கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த பினா தாஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications