For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்கேப்பாகி சென்னையில் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் ஈரோடு தோழிகளுக்கு வலை

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஓடிவந்த இணைபிரியா தோழிகளான கல்லூரி மாணவிகளை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்..

ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் மாலை நேர வகுப்பில் பி.ஏ. பட்டப்படிப்பு படிப்பவர் ஸ்ரீதேவி இவருடன் அதே வகுப்பில் படிப்பவர் நர்மதா. ஸ்ரீதேவிக்கு திருமணம் ஆகிவிட்டது. நர்மதா திருமணம் ஆகாதவர். நெருங்கிய தோழிகளான இருவரும் ஒன்றாக வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டனர். ஈரோடு மாவட்டத்தில் எங்கு தேடியும் இந்த இணையரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சென்னையில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் முகாமிட்டுள்ள ஈரோடு தனிப்படை போலீசார் இணையரைப் பற்றி தகவல் தெரிந்தால் 9445492535 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

English summary
The Chennai police are searching for college students who has been missing from Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X