ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
இங்குள்ள 5 யூனிட்களில் 3 யூனிட்கள் தான் இயங்கி வந்தன இதன் மூலம் 130 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மின்சாரம் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும்.
இந்த மின் நிலையத்தில் உள்ள பாய்லர்களை குளிரூட்ட கடல் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடல் நீர் சுத்தப்படுத்தப்படும். இந் நிலையில் ரசாயன தட்டுப்பாடு காரணமாக கடல் நீரை சுத்தப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பாய்லர்களை குளிரூட்ட முடியவில்லை.
இதையடுத்து எண்ணூர் அனல் மின் நிலையத்தின் 3 யூட்களும் நிறுத்தப்பட்டு விட்டன. இதன் காரணமாக இங்கு உற்பத்தியாகி வந்த 130 மெகாவாட் மின்சாரமும் நின்றுபோய்விட்டது.
இந் நிலையில் கடல் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துவதற்கான ரசாயனத்தை உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது எப்படி முழுமையாக ரசாயனம் காலியாகும் வரை நிர்வாகம் சும்மா இருந்தது என்று தெரியவில்லை.