குழந்தையை சுவற்றில் வீசி கொன்ற குடிகார தந்தை சிறையில் தற்கொலை
சென்னை: குடிபோதையில் 2வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொலை செய்ததற்காக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே பொத்தேரியைச் சேர்ந்த சரவணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் தமது மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவாராம். இதுபோல் கடந்த 2011-ம் ஆண்டு குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சரவணன், வெறித்தனமாக தமது 2வயது குழந்தை அபிநயாவை சுவற்றில் தூக்கி வீசியுள்ளார். இதில் அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் சரவணன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் புழல் சிறையின் ஏ பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த சரவணன் தமது லுங்கி மற்றும் சட்டையைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டார். சரவணன் தூக்கில் தொங்கும்போது அவருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் தூங்கிக் கொண்டிருந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சிறை வார்டன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications