பி.இ. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ஆசிரியர்களுக்கு உளவியல் நிபுணர்கள் பயிற்சி
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர்கள், உளவியல் நிபுணர்களைக் கொண்டு கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.
பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவியர் படிக்க முடியாவிட்டால், தேர்வில் பெயிலாகிவிட்டால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அண்மையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர் மணிவண்ணன் 24 பேப்பர்களில் பெயிலானதால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த சில நாட்களில் அதே கல்லூரியில் படித்த தைரிய லட்சுமி என்ற மாணவி செமஸ்டரில் பெயிலாகிவிடுவோமோ என்ற பயத்தில் தூக்கில் தொங்கிவிட்டார்.
இது போன்று மாநிலத்தில் பல மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தற்கொலைகளை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இருந்து தலா ஒரு ஆசிரியருக்கு இன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. டாக்டர்கள், உளவியல் நிபுணர்கள், சினேகா தற்கொலை தடுப்பு மையம் ஆகியவை இணைந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றன.
முதல் கட்டமாக இன்று 80 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே போன்று 3 முறையாக 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தங்கள் கல்லூரிகளில் உள்ள பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அதன் பிறகு மாணவர்களின் மனோதைரியத்தை அதிகரிக்க அவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.












Click it and Unblock the Notifications