கேரளா-கர்நாடகத்துக்கு பஸ்கள் நிறுத்தம்!: எல்லையுடன் திரும்பிய தமிழக பேருந்துகள்!

Subscribe to Oneindia Tamil

TN Govt Bus
சென்னை: பாரத் பந்த்தையொட்டி கேரளா மற்றும் கர்நாடகத்திற்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லையோடு நிறுத்தப்பட்டுவிட்டன.

பந்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்தக் கட்சியின் ஆட்சி நடக்கும் கர்நாடகத்துக்கு தமிழக அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டுவிட்டன. மைசூர் செல்லும் பேருந்துகள் கொள்ளேகால் வரை மட்டுமே இயங்கப்பட்டன. பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஒசூரிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.

அதே போல இடதுசாரிகளின் ஆதரவுடன் கேரளத்திலும் பந்த் வெற்றிகரமாக நடப்பதால் கோவையில் இருந்து கேரளாவுக்குச் செல்லும் பேருந்துகள் இயங்கவில்லை.

ஊட்டியில் தவித்த சுற்றுலாப் பயணிகள்:

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தனூர், குன்னூர் ஆகிய பகுதிகளில் 30 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன.

உள்ளூர் பேருந்துகள் வழக்கம் போல இயங்கினாலும் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தமிழகத்தின் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த பந்த் காரணமாக மதுரையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆட்டோக்கள், பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. கடைகள் திறந்திருந்தன. கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சித் தொண்டர்கள் சில இடங்களில் மறியலில் ஈடுபட முயன்று கைதாகினர்.

மதுரையிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+