கருணாநிதி பிறந்தநாள் கவிதை போட்டி -வென்றவர்களுக்கு வைரமுத்து பரிசு

Subscribe to Oneindia Tamil

Vairamuthu
சென்னை: கருணாநிதியின் 89வது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட மரபுக் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வரும் ஜுன் 4ம் தேதி கவிஞர் வைரமுத்து பரிசுகளை வழங்கவுள்ளார்.

இது குறித்து திமுக தலைமை இலக்கிய அணியின் தலைவர் கவிஞர் கா.வேழவேந்தன், செயலாளர்கள் கவிதைப் பித்தன், தஞ்சை கூத்தரசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திமுக தலைமை இலக்கிய அணி மரபுக் கவிதைப் போட்டி ஒன்றினை அறிவித்திருந்தது. தமிழகம், பெங்களூர், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் வாழும் கவிஞர்கள் 250 கவிதைகளை அனுப்பியிருந்தனர்.

நடுவர்கள் கா.வேழவேந்தன், கவிதைப்பித்தன், கயல் தினகரன் ஆகியோர் கவிதைகளை மதிப்பீடு செய்து ஒருமித்த கருத்தோடு பரிசுகளுக்குரிய கவிஞர்களை தேர்வு செய்தனர்.

அதன்படி, முதல் பரிசு ரூ.10,000 கவிஞர் கவியரசன், 2ம் பரிசு ரூ.5,000 கவிஞர் ஆ.குமாரசாமி, 3ம் பரிசு ரூ.3.000 கவிஞர் க.பாவை, ஆறுதல் பரிசு ரூ.2,000 பாவலர் ப.எழில்வாணன் ஆகியோர் பெறுகின்றனர்.

இந்தக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜூன் 4ம் தேதி மாலை 5.30 மணியளவில், தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்த நாள் விழாவில், கவிஞர் வைரமுத்து பரிசுகளை வழங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+