பின்லேடனை காட்டி கொடுத்த டாக்டர் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து- உளவுத் துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Dr Shakil Afridi
வாஷிங்கடன்: பாகிஸ்தானில் பதுங்கிய இருந்து அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை காட்டி கொடுத்த பாகிஸ்தான் டாக்டர் சஷில் அப்ரிடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக, பாகிஸ்தான் உளவுத் துறை எச்சரித்துள்ளது.

அமெரிக்கா நாட்டின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தி உலகமெங்கும் பிரபலமானவர் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன். இதன் பிறகு அமெரிக்க அரசால் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த ஒசாமா, பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்த போது, அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் சஷில் அப்ரிடி என்பவர் தான் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்த இடம் குறித்த ரகசிய தகவலை அளித்தவர். ஆனால் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்.

சஷில் அப்ரிடியின் உதவியை பாராட்டி, அவரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அமெரிக்க அரசு, பாகிஸ்தானை கேட்டு கொண்டது. மேலும் அவரை குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறுமாறும் அமெரிக்க அரசு கூறியது.

ஆனால் அதற்கு சஷில் அப்ரிதி மறுத்துவிட்டதாக தெரிகிறது. தற்போது அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஷில் அப்ரிடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக, பாகிஸ்தான் உளவுத் துறையினர் எச்சிரிக்கை விடுத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஷில் அப்ரிடியை தீவிரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்யலாம் என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது.

அடியலா சிறையில் 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 250க்கும் மேற்பட்டோர் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்கள். எனவே அடியலா சிறைக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+