ஹௌலாவில் 108 பேர் படுகொலை: அமெரிக்காவுக்கான சிரிய துணைத் தூதர் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: சிரியாவில் உள்ள ஹௌலாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட 108 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கலிபோர்னியாவில் உள்ள சிரிய கௌரவ கன்சல் ஜெனரல் ஹாசம் செஹாபி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், சிரிய அரசுடனான தொடர்பையும் துண்டித்துள்ளார்.

சிரியாவில் அதன் அதிபர் பஷார் ஆசாத்திற்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த போராட்டங்களின்போது வெடித்த வன்முறைகளில் ஏற்கனவே 10,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஹௌலா என்ற இடத்தில் 108 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆகும்.

இந்த படுகொலைக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த படுகொலையை கண்டித்து கலிபோர்னியாவில் உள்ள சிரிய கௌரவ கன்சல் ஜெனரல் ஹாசம் செஹாபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஆசாத் அரசுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை காட்டிமிராண்டித் தனமானது என்று அவர் விமர்சித்துள்ளார்.

இனி தனது மருத்துவ தொழிலை கவனிக்கப் போவதாக அவர் தெரிவி்ததார். அவர் கடந்த 18 ஆண்டுகளாக இந்த பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+