டீசல், கியாஸ் விலையை கண்டிப்பாக உசத்தனும்: அடம்பிடிக்கும் மன்மோகன் ஆலோசகர் ரங்கரரஜன்
Subscribe to Oneindia Tamil

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரங்கராஜன் கூறியதாவது:
இந்தியாவில் தற்போது நிதி பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. இதை தடுக்க வேண்டுமானால் மானியம் வழங்கப்படுவதை குறைக்க வேண்டும். பெட்ரோலியம் பொருட்களுக்குத்தான் அதிக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இதனால்தான் பெட்ரோலியம் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.
டீசல், கியாஸ் விலையை விரைவில் உயர்த்த வேண்டும். இதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீசல், கியாஸ் விலையை கணிசமாக உயர்த்தினால் தான் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த முடியும். இதுவும் கூட ஏழைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகத்தான் என்றார் ரங்கராஜன்.












Click it and Unblock the Notifications