விருதுநகரில் ஒரு சகாயம்... அதிரடி கலெக்டர் பாலாஜிக்கு மக்கள் பாராட்டு மழை!

விருதுநகர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற பாலாஜி, மாவட்டத்தில் மாநில அரசின் திட்டங்களில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது குறித்தும், தங்கள் பகுதிகளில் நடக்கும் உடனடி நிகழ்வுகள் குறித்தும், தனது செல்போன் எண்ணான 94880 64000க்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என கூறியிருந்தார்.
இதனையடுத்து மாவட்டத்தில் இருந்து பல தரப்பட்ட மனுக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல்கள் மலை மலையாக குவிந்து வருகின்றதாம். மேலும் பலர் செல்போனில் தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். இவைகளை எல்லாம் பொறுமையாக கேட்கும் பாலாஜி அது குறித்த உண்மையான தகவல்களை தனது நம்பிக்கைக்குரிய அதிகாரிகள் மற்றும் சமூக சேவகர்கள் மூலம் சரிபார்க்கிறார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் வருவாயத்துறைக்கு என சுமார் 100 பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் தேவைப்பட்டது. இதில் அரசியல் மற்றும் சிபாரிசுகள் மூலம் தவறான நபர்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என அவரே நேரடி நேர்முக தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்துள்ளார்.
அதே போல மாவட்டத்தில் 1,076 அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் தேவைப்படுகின்றார்களாம். இதில் எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என பலரும் அரசியல்வாதிகள் சிபாரிசை நாடி வருகின்றார்களாம். ஆனால் முன்பு போலவே தகுதியான நபர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும், அரசியல் சிபாரிசுகளுக்கு வேலை இல்லை என்று தைரியமாக கூறி, அதை செயல்படுத்தவும் தயாராகி வருகின்றாராம் பாலாஜி.
இதனால் மாவட்டத்தில் உள்ள சில அரசியல் புரோக்கர்கள் வைகைப்புயல் வடிவேல் கூறும் டயலாக்கான வடை போச்சே ஸ்டைலில் பணம் போச்சே என புலம்பி வருகின்றார்களாம்.
கலெக்டர் பாலாஜியின் நேர்மையான நடவடிக்கைகளால் ஏற்கனவே மகிழ்ந்து போன மக்களை இந்த அறிவிப்பு மேலும் மகிழ வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications