காஷ்மீரில் பாக். நிலைப்பாடு மாறினால் போரை சந்திக்க நேரிடும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
காஷ்மீர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் மீது போர்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் இதுவரை கடைபிடித்து வந்த நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக் கொண்டால் எங்களது போரானது பாகிஸ்தான் நாட்டின் மீது பாகிஸ்தான் நாட்டுக்குள் நடைபெறும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சலாலுதீன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
காஷ்மீர் மீதான பாகிஸ்தானின் யுத்தத்துக்காகவே நாங்கள் பாகிஸ்தானுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை இந்தப் போரில் பாகிஸ்தான் விலக நேர்ந்தால் எங்களது போரானது பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக நடத்தப்படும்.
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் பல சுற்று அமைதிப் பேச்சுகளை நடத்தி வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்துக்கு ஆயுதவழிப்பட்ட தீர்வுதான் சரியானதாக இருக்கும். இதனால் பாகிஸ்தானும் இந்தியாவும் நடத்துகின்ற அமைதிப் பேச்சுகளை நாங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸாதான் இதுவரை மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பாகிஸ்தானின் இந்த புதிய நிலைப்பாடான காஷ்மீர விடுதலைப் போராட்டத்தை காயப்படுத்துவதாகவும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் படைகள் வெளியேறுவதற்கு யார் பேச்சுவார்த்தை நடத்தியது? ஈராக்கிலும் ஆப்கானிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தியா படைகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன? பேச்சுவார்த்தைக்கான சூழலே இல்லாத நிலையில் இருக்கின்ற நிலைமைகளுக்கு ஏற்பட அமெரிக்கப் படைகள் விலக வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் இருக்கின்றன. இதே யுக்தியைத்தான் காஷ்மீரில் நாங்கள் செயல்படுத்தப் போகிறோம். காஷ்மீரில் இருந்து இந்தியப் படைகள் தானாகவே விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார் அவர்.