விலை உயர்வு- அஞ்சல் நிலையங்களில் தங்கம் விற்பனை சரிவு
Subscribe to Oneindia Tamil

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அஞ்சல் துறை சேவையை மக்கள் மறந்து விட்டனர். அஞ்சல் துறையை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து அஞ்சல் துறை தங்க நாணய விற்பனையை தொடங்கியது. அரை கிராம் முதல் 20 கிராம் வரை எடையிலான தங்க நாணயங்கள் அஞ்சல் அலுவலகங்கள் விற்கப்படுகின்றன.
மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற அஞ்சல் துறையின் தங்க நாணயங்களை மக்கள் நம்பி வாங்கினர். இதில் நெல்லை டவுன் ஸ்ரீபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தங்க விற்பனை படுஜோராக நடந்தது. இதனால் இந்த அலுவலகம் விற்பனையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. ஆனால் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால் விற்பனையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications