உங்களுக்கு என்ன தெரியும்? மன்மோகன், சிதம்பரமெல்லாம் ரொம்ப நேர்மையானவங்க! - நாராயணசாமி

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒரிரு நாளில் வெளியிட உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர் யார் என்பதை பற்றி சோனியாகாந்தி அறிவிப்பார்.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்றோரை எதிர்த்து 111 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. ஒருவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவுடன் பதவி விலக வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வரட்டும். அப்போதுதான் பதவி விலக வேண்டும். தாம் தவறு செய்யவில்லை என்பதை ப. சிதம்பரம் நிச்சயம் நிரூபிப்பார்.
இதேபோல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிந்துரை செய்தவற்றிக்கு தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. குழு பரிந்துரையின் பேரில் ஒதுக்கீடு பெற்ற சில தனியார் நிறுவனங்கள் மீது குற்றசாட்டு உள்ளது. இது பற்றி தான் விசாரணை நடத்தப்படுகிறது. அன்னா ஹசரே குழுவினர் பிரதமர் மீது கூறும் குற்றசாட்டு ஆதராமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications