புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுகவிற்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு- சி.என்.ராமமூர்த்தி!
சேலம்: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க போவதாக வன்னியர் கூட்டமைப்பு நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலத்தில் அவர் கூறியதாவது
தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் இந்த ஒரு ஆண்டில் பல திட்டங்களை கொண்டு வந்து மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். இதனால் வன்னியர் கூட்டமைப்பு, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது.
மத்திய அரசு, மாநில அரசின் அனைத்து பிரச்சனைகளிலும் தலையிடுகிறது. அது தவறான செயல். தற்போது ரயில்வே சரக்கு கட்டணத்தையும், பெட்ரோல் விலையையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் விலை உயர்வை மக்களின் நலன் கருதி மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அதிமுக போராட்டம் நடத்தியது. இதனால் பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும் போது பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியது தவறு.
டாக்டர் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. ராமதாஸூம், அன்புமணியும் தவறாக பேசி சமுதாய மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களின் முயற்சி எடுபடாது.
தேர்தலின் போது டாக்டர் ராமதாஸ் அடிக்கடி கூட்டணி மாறுவதால் தான் அடுத்தடுத்த தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறார். அந்த தோல்வி வரும் காலத்திலும் தொடரும் என்றார்.












Click it and Unblock the Notifications