5ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்-சாலை மறியல் செய்த பெற்றோர்
தென்காசி: தென்காசி அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவிகளின் பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று 13வது வார்டு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பாசிரியர் ஆண்டியப்பன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனே பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் செய்துள்ளனர். ஆனால் தலைமை ஆசிரியர் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆண்டியப்பன் தொடர்ந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இன்று பெற்றோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆண்டியப்பன் இன்று பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரை கைது செய்யவும், பணி நீக்கம் செய்யவும் வேண்டுமென பெறறோர்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications