குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது?

தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் ஜூலை 24-ல் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி டெல்லியில் சூடு பறக்க அரசியல் நடந்தேறிவருகிறது.
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நேற்று புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற வி.எஸ்.சம்பத் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி வெளியிடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 13-ந் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
புதிய குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் யார் என்பது தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி வெளியிடப்பட்டுவிட்டால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றிய கட்சிகளின் நிலைமையும் தெளிவாகிவிடும்.












Click it and Unblock the Notifications