'சாமி' ஏன் போலீஸாரைப் பார்த்து ஓட வேண்டும்?... நெல்லை கண்ணன்
மதுரை: சாமி என்று தன்னையே கூறி கொள்ளும் நித்தியானந்தா ஏன் கர்நாடக போலீஸாரைப் பார்த்து ஓட வேண்டும் என்று மதுரை ஆதீன மீட்புக் குழுத் தலைவர் நெல்லை கண்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நித்தியானந்தா மீது கர்நாடக முதல் அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நித்தியானந்தா தன்னை கடவுள் என குறிப்பிடுவதாக இருந்தால், ஏன் கைது நடவடிக்கைக்கு பயப்பட வேண்டும். அதை எதிர்கொள்ள வேண்டியதுதானே.
பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும். அரசு அந்த ஆசிரமத்தை கைப்பற்ற வேண்டும். நித்தியானந்ததா மீதான பாலியல் புகார்களை மாநில அரசு ஒரு குழு போட்டு விசாரிக்க வேண்டும். பிடதி ஆசிரமத்தின் வரவு செலவுகளை முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை கர்நாடக முதல் அமைச்சருக்கு முன் வைத்தேன். அதனை ஏற்று கர்நாடக முதல் அமைச்சர் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மதுரை ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை தடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தேன். இதில் கர்நாடக முதல் அமைச்சர் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications