பியூன் கூட இந்திய தூதராகலாம்!..

கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள வட கொரியாவில் டைம் பாஸ் ஆவது மிகவும் கடினம். அங்கு சுதந்திரமாக உலா வரவோ அல்லது வாழ்க்கையை இன்பமாகக் கழிக்கவோ முடியாது.
ஆனாலும் சீனாவின் மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நாட்டில் இந்தியத் தூதரகத்துக்கு மிக மிக முக்கியமான பணிகள் உள்ளன. சீனக் கடல் பகுதியை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்களில் வட கொரியாவின் உறவு இந்தியாவுக்கு மிக மிக முக்கியம்.
ஆனாலும், அங்கு பணிக்குச் சென்றால் வாழ்க்கையை என்ஜாய் செய்ய முடியாது என்பதால் முக்கியமான ஐஎப்எஸ் அதிகாரிகள் யாரும் அங்கு தூதராகச் செல்ல விரும்புவதில்லை. இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் மிக முக்கியமான அந்த தேசத்துக்கு டம்மியாக யாரையாவது தூதராக நியமித்துவிட்டு மூத்த அதிகாரிகள் எஸ்கேப் ஆகி வருகின்றனர்.
அந்த வகையில் தான் பிஜீ தீவுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சுருக்கெழுத்தாளராக இருந்த அஜய் கே. ஷர்மாவை, வட கொரியாவுக்கு தூதராக நியமித்தனர் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு இது தொடர்பாக அனுப்பிய பைலில், ஷர்மா பிஜீ தீவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கவுன்சிலர் பதவியில் இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரை வட கொரியாவுக்கான தூதராக நியமித்துக்கு கையெழுத்தும் போட்டுவிட்டார் கிருஷ்ணா. பின்னர் அது பிரதமர் அலுவலம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.
ஆனால், ஷர்மா ஒரு சாதாரண சுருக்கெழுத்தாளர் என்ற விவரம் வெளியானதையடுத்து அவரது நியமனத்தை கிருஷ்ணா ரத்து செய்துள்ளார்.
முன்பு முக்கியத்துவம் இல்லாத நாடுகளுக்கு சுருக்கெழுத்தாளர்களை தூதர்களாக நியமிக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், அதற்கு முன் அவர்களுக்கு ஐஎப்எஸ்- பி என்ற கிரேட் வழங்கப்படும். ஆனால், அஜய் ஷர்மாவுக்கு எந்த கிரேடும் தராமல் நேரடியாக தூதராக நியமிக்க முயற்சி நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தனக்கு தவறாக தகவலைத் தந்த மூத்த அதிகாரிகளை கிருஷ்ணா வறுத்தெடுத்ததாகத் தெரிகிறது. வெளியுறவுத்துறையின் நிர்வாகப் பிரிவின் சிறப்புச் செயலாளர் அசோக் தோமர் தான் அஜய் ஷர்மாவை தூதராக நியமிக்குமாறு வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கு பரிந்துரை செய்ததாகவும் தெரிகிறது.
31 ஆண்டுகளுக்கு முன் பி.ஏவாக வெளியுறவுத்துறையில் பணிக்குச் சேர்ந்த அஜய் ஷர்மா சர்வதேச பொருளாதார, அரசியல், கலாச்சார விவகாரங்கள் பிரிவில் பணியாற்றியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தான் தூதராக நியமிக்க முயற்சி நடந்துள்ளது.
மூத்த அதிகாரிகள் அது எவ்வளவு முக்கியமான நாடாக இருந்தாலும், அங்கு என்ஜாய் செய்ய முடியாது என்றால், பணிக்குச் செல்லத் தயாராக இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
இந்திய வெளியுறவுத்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications