ஆத்தாடி மீண்டும் மின்வெட்டா? அலறும் பொது மக்கள்

தமிழகத்தில் நீர் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டதால் மின்சார வினியோகம் குறைந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாலும் மின் தடையை அமல்படுத்துவதில் காட்டப்படும் பாரபட்சம் மக்களை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது. இயற்கையாக வெயில் அதிகமாக உள்ள திருச்சி, கரூர், வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கோவை, திருப்பூர் போன்ற தொழில் மாவட்டங்களில் மின்தடையால் தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் கூட மின் வினியோகம் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து சமுக சேவகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில்,
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மின் வினியோகம் ஓரளவு சீராக இருந்தது. இதனால் நாங்கள் அவசரப்பட்டு பேட்டரி, இன்வெர்ட்டர் வாங்கிவிட்டோமோ என்று வருத்தப்பட்டோம். பல ஆயிரம் ரூபாய் தேவையில்லாமல் செலவு செய்துவிட்டோமோ என கலங்கினோம்.
ஆனால் தற்போது மீண்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின் தடை ஏற்படுகின்றது. இதற்கு காரணமாக புதுக்கோட்டை இடைத் தேர்தலை சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். புதுக்கோட்டையில் இடைத் தேர்தலை முன்னிட்டு அங்கு சீராக மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். அப்போது தான் அங்குள்ள மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். அதனால் புதுக்கோட்டைக்கு மின் தடை இல்லாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்கின்றனர்.
ஆனால் அருகில் உள்ள திருச்சி, கரூர், சிவகங்கை, மதுரை போன்ற பல மாவட்டங்களில் மீண்டும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications