For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்மா நிச்சயம் பிரணாப்புக்கு ஆதரவளிப்பார்: தேசியவாத காங்கிரஸ் நம்பிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

Sangma and Pranab Mukherjee
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் சங்மாவை அவர் சார்ந்திருக்கும் தேசியவாத கட்சி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை போலும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக சங்மா வாக்களிப்பார் என்று நம்புவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் திரிபாதி கூறியுள்ளார்.

டெல்லியில் பிரணாப் முகர்ஜியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரிபாதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

பி.ஏ. சங்மா கட்சியின் மூத்த தலைவர். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக வரும் 21- ந் தேதி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். எங்களைப் பொறுத்தவரையில் சங்மா போட்டியிலிருந்து விலகிக் கொண்டு பிரணாப் முகர்ஜியைத்தான் ஆதரிப்பார் என்று நம்புகிறோம் என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்.

கலாம் போட்டியிடாத நிலையில் அதிமுக, பிஜூ ஜனதா தளம் சார்பில் நிறுத்தப்படும் சங்மாவை ஆதரிக்கலாம் என்று பாஜக முடிவெடுக்கும் நிலையில் அட ராமா! சங்மாவும் இல்லையா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில்தான் தேசியவாத காங்கிரசின் நம்பிக்கை உள்ளது.

English summary
The NCP on Tuesday expressed confidence that party leader P A Sangma will ultimately support UPA presidential candidate Pranab Mukherjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X