நாளை ஜெ கொடநாடு பயணம் - சில வாரங்கள் ரெஸ்ட்!
Subscribe to Oneindia Tamil

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு அவ்வப்போது செல்லும் ஜெயலலிதா, அங்கு தங்கியிருந்தபடியே கட்சி பணிகளையும்,அரசுப் பணிகளையும் கவனிப்பதுண்டு. அவருடன் தோழி சசிகலாவும் செல்வது வழக்கம்.
ஓய்வு தேவைப்படுவதால் அவர் நாளை கொடநாடு செல்ல இருக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சில வாரங்கள் கொடநாட்டில் தங்கியிருந்தபடி, அரசுப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா கவனிப்பார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உதவிக்காக சசிகலாவும் உடன் செல்கிறார். முக்கிய துறை அதிகாரிகளும், முதல்வரின் அலுவலக அதிகாரிகளும் முன்கூட்டியே செல்கின்றனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி, முன்கூட்டியே, ஒரு மினி தலைமைச் செயலகம் கொட நாட்டில் செயல்பட ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications