மம்தா கட்சியில் பிளவு: பிரணாப் முகர்ஜிக்கு மூத்த எம்.பி. ஆதரவு!
கொல்கத்தா: ஜனாதிபதி தேர்தல் பாஜக, காங்கிரஸ் கூட்டணியில் மட்டுமல்ல, பல கட்சிகளிலும் பிளவை ஏற்படுத்தி வருகிறது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடியாது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார். ஆனாலும் அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த எம்பியான கபிர் சுமன், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கர்நாடக பாஜகவின் முக்கியத் தலைவரான எதியூரப்பா தனது சிபிஐ சிக்கல்களில் இருந்து தப்புவதற்காக மத்திய அரசின் தயவைப் பெற பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார். இவரது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பிரணாபுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் பிரணாபுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இந்தக் கட்சியின் சார்பில் ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியும் மேலும் சில எம்பிக்களும் மம்தாவின் பேச்சை கேட்பதில்லை.
இந் நிலையில் மூத்த எம்பியான கபிர் சுமன் கூறுகையில், ஜனாதிபதியாவதற்கு மிக ஏற்ற நபர் பிரணாப் முகர்ஜி தான். ஜனாதிபதி என்பவர் பெருத்த அனுபவம் பெற்ற திறமைசாலியாக இருக்க வேண்டும். இதற்கு இப்போது பிரணாபை விட்டால் வேறு வழியில்லை. மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியான பிரணாப் தான் ஜனாதிபதியாக வேண்டும்.
மேலும் பெங்காலியான பிரணாப் ஜனாதிபதியாவதில் எனக்கு மிகுந்த பெருமையும் உண்டு என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மம்தா பானர்ஜி மிகச் சிறந்த அரசியல்வாதி. தனி ஒரு ஆளாக நின்று இடதுசாரிகளை வீழ்த்தியவர். ஆனால், இன்னும் தன்னை ஒரு எதிர்க் கட்சித் தலைவராகவே அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். தான் ஒரு முதல்வர் என்பதை அவர் மறக்கக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டமான அரசியல், போராளி மாதிரியான செயல்கள் எல்லாம் இனி தேவையில்லை என்றார்.
கபிர் மிகச் சிறந்த பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், மம்தாவின் தாளத்துக்கு பாடாமல் காங்கிரஸ் பாட்டை பாடிவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications