இந்தியாவில் 2050-ல் நகரங்களில் வாழ்வோரின் எண்ணிக்கை 86 கோடியாக இருக்குமாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் நகரமயமாக்கலின் விளைவு எப்படி இருக்கப் போகிறது தெரியுமா? 2050-ம் ஆண்டில் சுமார் 85 கோடிப் பேர் நகரங்களில்தான் வசிக்கப் போகின்றார்களாம் என்கிறது ஜோன்ஸ் லங் லாசல் என்ற நிறுவன ஆய்வறிக்கை.

பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாதான் மிக அதிகவேகமாக வளர்ந்து வரக் கூடிய நாடு என்கிறது அந்த அறிக்கை. 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்குள் நகரங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையானது 28 சதவீதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்த நிலையில் நகரங்களை நாடும் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனால் 2050 ஆம் ஆண்டில் 843 மில்லியன் பேர் நகரங்களில் வசிப்போராக இருப்பர் என்கிறது அறிக்கை.

சிறு சிறு நகரங்கள் கூட மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் என பெருநகரங்களைப் போல் காட்சியளிக்கக் கூடுமாம். அதேபோல் 2020-ம் ஆண்டில் இந்தியாவில் சராசரி வயது என்பது 29 ஆகத்தான் இருக்குமாம். சீனாவிலும் அமெரிக்காவிலும் சராசரி மனிதர்களின் வயது 37 ஆக இருக்கும் என்கிறது ஆய்வு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+