ஏர் இந்தியா விமானிகள் 48 மணி நேர உண்ணாவிரதத்தில் குதித்தனர்
Subscribe to Oneindia Tamil

கடந்த 40 நாட்களாக ஏர் இந்தியா விமானிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த லீவு போட்டு போராட்டம் நடத்தினர். இதுபோன்று பல்வேறு வகையான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட விமானிகள் இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விமானிகள் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதேபோல மும்பையிலும் விமானிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications