For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை விமானத்தில் பறவை மோதியது... 66 பயணிகள் தப்பினர்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிய தனியார் விமானம் மீ்து பறவை மோதியது. இதையடுத்து உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 66 பயணிகளும், ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

சென்னையிலிருந்து மதுரைக்கு 66 பேருடன் தனியார் விமானம் கிளம்பியது. அப்போது ஒரு பறவை விமானத்தின் என்ஜின் பகுதியில் மோதி என்ஜினில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து விமானி, விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக விமான நிலையத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அதில் இருந்த அத்தனை பேரும் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் வேறு ஒரு விமானத்தில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

English summary
A Bird was hit Madurai bound flight in Chennai airport this morning. After hitting the flight the bird was stuck in the engine. The flight was grounded immediately.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X