For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரழிவு ஏற்படும்... ரணவக்க மீண்டும் எச்சரிக்கை!-தூண்டி விடுவது ராஜபக்சே?

Google Oneindia Tamil News

கொழும்பு: இனி தமிழீழம் குறித்து இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி யாரும் பேசக் கூடாது. அப்படி நினைத்தால், குரல் கொடுத்தால், இலங்கையில் பெரும் பேரழிவுகளே ஏற்படும். இதை நான் உலக நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் தெளிவுபடக் கூறிக் கொள்கிறேன். ஈழ மக்களும் இதைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது என்று இலங்கை இனவாத அமைச்சர் சம்பிக ரணவக்க மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி அமைச்சர்தான் இந்த சிங்கள இனவெறி பிடித்த ரணவக்க. சமீபத்தில், ஒரு முள்ளிவாய்க்காலை தமிழர்கள் சந்தித்தது போதாதா, இன்னும் 100 முள்ளிவாய்க்கால்கள் வேண்டுமா என்று இனவெறியுடன் குரைத்திருந்தார்.

இந்த வெறி பிடித்த பேச்சுக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய அரசுக்கும் புகார் கூறியிருந்தனர். வழக்கம் போல வாயில் வாழைப்பழம் சிக்கிக் கொண்டதைப் போல பிரதமரும் சரி, மத்திய அரசும் சரி யாருமே பேசவில்லை. கம்மென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தற்போது பிரணாப் முகர்ஜியை எப்படியாவது குடியரசுத் தலைவராக்கி விட வேண்டும் என்ற ஒரே கவலை மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் மெளனத்தை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு மீண்டும் குரைத்துள்ளார் ரணவக்க.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது.ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை.

தமிழீழத்திற்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுகளே ஏற்படும். இதற்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் ஏமாறக் கூடாது. ஈழத்துக்கு தமிழகமும் முயற்சிக்க கூடாது.

இதனை அனைத்து தரப்புக்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன்.இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் ௭ன்று இந்தியா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளுக்கு பல முறை கூறியும் கேட்டபாடில்லை.
௭னவே இதற்கு ௭திராகவும் நடவடிக்கைகள் முன்னெடுப்பது அவசியமாகும். ௭வ்வாறாயினும் கருணாநிதி,சீமான்,வைகோ போன்றவர்களின் விருப்பங்கள் இலங்கையில் ஈடேறாது.

௭னக்கு ௭திராக கடந்த வாரத்தில் தமிழகத்தில் பெரிய ௭திர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனை வைகோ, சீமான் மற்றும் கருணாநிதி போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் இலங்கையின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலேயே செயற்படுகின்றனர்.

இலங்கை பிரச்னை ௭னக் கூறி சர்வதேச புலிகளிடமிருந்து நிதிகளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் உள்நாட்டு அரசியலில் இருப்பைத் தேடிக் கொள்கின்றனர். இந்தியாவில் முன்னெடுக்கப்படுகின்ற ௭வ்வகையான போராட்டத்திற்கும் அஞ்சப் போவதில்லை. அதேபோன்று உள்நாட்டு விஷயங்களில் தலையிடுவதையும் அனுமதிக்கப் போவதில்லை.

புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கிக் கொள்ளவே தமிழ் நாட்டின் ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு ஒரு போதும் ஜாதிக ஹெல உறுமய இடமளிக்காது என்று கொக்கரித்துள்ளார் இந்த இனவெறி அமைச்சர்.

ரணவக்க தொடர்ந்து இந்தியாவையும், தமிழகத்தையும் மிரட்டுவது போல பேசி வருகிறார். ஆனால் ராஜபக்சே வாயை மூடிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் சொல்லித்தான் ரணவக்க பேசி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

English summary
Sinhala minister Sampika Ranawaka has warned India and Tamil Nadu again. He has warned India not to support Tamil Eelam nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X