9ம் வகுப்பு மாணவியுடன் பெங்களூர் சென்று 'தங்கிய' கணக்கு வாத்தியார் டிஸ்மிஸ்!
வேலூர்: 9ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று ஹோட்டலில் ரூம் போட்டு உல்லாசமாக இருந்த கணக்கு வாத்தியார் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தயாநிதி. 26 வயதான அவர், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி சுகுமாரியிடம், உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த மாணவி ஆசிரியர் வலையில் வீழ்ந்தார்.
இதையடுத்து மாணவியை பெங்களூருக்குக் கூட்டிச் சென்ற ஆசிரியர் அங்கு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் போலீஸார் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து சென்று மாணவியையும், ஆசிரியரையும் பிடித்தனர். தயாநிதி கைது செய்யப்பட்டார். பின்னர் சஸ்பெண்ட் ஆனார்.
தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அதற்குத் தடை உத்தரவு பெற்றார். பின்னர் ராணிப்பேட்டை அரசுப் பள்ளிக்கு மாற்றலாகி அங்கு பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை, ஆசிரியர் கூட்டிச் சென்று பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications