ரஷ்யா: 2 மகன்களை 15வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற தாய்
மாஸ்கோ: ரஷ்ய பெண் ஒருவர் தனது 7 மற்றும் 4 வயது மகன்களை 15வது மாடியில் இருந்து தள்ளிக் கொன்றுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவைச் சேர்ந்தவர் கலினா ரயப்கோவா(30). அவருக்கு 7 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள். அவர் மாஸ்கோவில் உள்ள குடியிருப்பில் 8வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது 2 மகன்களையும் குடியிருப்பின் 15வது மாடிக்கு அழைத்துச் சென்று அவர்களை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்த சம்பவம் நடந்தபோது அவரது கணவர் வியாபார நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கலினாவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த குடியிருப்பில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில்,
என் மனைவி என்னை எழுப்பி குழந்தைகள் மாடியில் இருந்து கீழே விழுவதாகத் தெரிவித்தாள். உடனே வெளியே ஓடிப் போய் பார்த்தபோது இரண்டு குழந்தைகள் கீழே கிடந்தனர். அப்போது அவர்களின் தாய் அங்கிருந்து வெளியே சென்றார். இவர்கள் உங்கள் குழந்தைகளா என்று கேட்டதற்கு, ஆம் நான் தான் தள்ளிவிட்டேன் என்றார்.
போலீஸ் விசாரணையில் கலினா கூறுகையில், குழந்தைகள் இருப்பது தொல்லையாக இருந்ததால் தான் அவர்களை மாடியில் இருந்து தள்ளி விட்டேன். தற்போது அவர்கள் வானில் தேவதைகளாகிவிட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications