For Daily Alerts
Just In
ஜூலை 7, 8ல் பிரான்சில் தமிழ் இலக்கிய உலக மாநாடு
பிரான்சின் திரான்சி நகரில் தமிழ் இலக்கிய உலக மாநாடு வரும் ஜூலை மாதம் 7,8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 12 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் தொழில்நுட்ப முன்னேற்றம், இன்றைய தமிழ் இலக்கியத்தில் உலமயமாக்கலின் தாக்கம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் பண்டைய தமிழ் இலக்கியம், தற்போதைய கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் குறித்து அறிஞர்கள் கட்டுரைகள் சமர்பிக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் திரான்சி மேயர் ஜீன் கிறிஸ்டோப் லகார்டே, மொரீஷியஸ் தேசியக் கவிஞர் பிராஸ்பர் ஜார்ஜ், கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
Comments
English summary
World conference on tamil literature will be held in Drancy, France on july 7 and 8.
Story first published: Wednesday, June 27, 2012, 12:32 [IST]