கைதுக்கு பயந்து அல்ல, போராட்டம் வெற்றி பெறவே மனு கொடுத்தோம்! - கருணாநிதி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும்...
கேள்வி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்களே?.
பதில்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கேள்வி: இலங்கை மந்திரி ஒருவர் தமிழக தலைவர்களை தாக்கி பேசி வருகிறாரே?.
பதில்: அவரது பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாது. அதை பொருட்படுத்த தேவையில்லை.
கேள்வி: செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 15 நாட்களாக 17 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்களே?.
பதில்: செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் இப்போது அப்படியில்லை. செய்ய வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
கேள்வி: தி.மு.க. நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக தி.மு.க.வினரை கைது செய்யக்கூடாது என்று போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்து இருக்கிறீர்களே?.
பதில்: ஏற்கனவே ஒரு வழக்கு சம்பந்தமாக வெளியான தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளோம். கைதுக்கு பயந்து மனு தரவில்லை. அறவழி போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே கொடுத்துள்ளோம்.
கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் தி.மு.க. முக்கிய தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறதே?.
பதில்: யார், யார் பங்கேற்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications