இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 34,580 கோடி டாலராக உயர்வு

உள்நாட்டில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் வணிக கடன்களை நிறுவனங்கள் திரட்டின. கடந்த நிதி ஆண்டைவிட இது 1,580 கோடி டாலர் அதிகமாகும். மொத்த வெளிநாட்டு கடனில் 30.2 விழுக்காடாகும். நீண்ட கால மற்றும் குறுகிய கால வர்த்தக கடன்கள் 800 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
கடந்த 2011 டிசம்பர் மாதத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கிகளில் மேற்கொள்ளும் டெபாசிட்டுக்கான வட்டியை நிர்ணயிக்கும் உரிமை வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வங்கிகள் இந்த டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தின. இதனாலு வெளிநாட்டு டெபாசிட்டுகள் மிகவும் அதிகரித்தன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட் 690 கோடி டாலர் அதிகரித்து 5,860 கோடி டாலரானது. மத்திய அரசு திரட்டிய கடன் 4.9 விழுக்காடு அதிகரித்து 8,190 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, மொத்த வெளிநாட்டு கடனில் 23.7 விழுக்காடாகும்.












Click it and Unblock the Notifications