இந்தியாவின் தொடரும் "சவூதி வேட்டை": மேலும் ஒரு தீவிரவாதியை நாடு கடத்துகிறது

Subscribe to Oneindia Tamil

Fasih Mohammed
டெல்லி: மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால் சவூதி அரேபியாவில் பதுங்கியிருந்ததைப் போல பெங்களூர் கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான பஷி முகமதுவும் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

சவூதி அரேபியாவில் பாகிஸ்தான் நாட்டு உதவியுடன் அபுஜிண்டால் பதுங்கியிருந்ததை அமெரிக்கா, இந்தியாவிடம் போட்டுக் கொடுத்தது. இந்தியா தமது நாட்டிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் என்ற நம்பிக்கையில் சவூதி அரேபியாவும் அபு ஜிண்டாலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் 2010-ம் ஆண்டு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியமானவனாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி பஷி முகமதுவும் சவூதியில்தான் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 28 வயதாகும் பஷி முகமது ஒரு பொறியியல் பட்டதாரி.

இதைத் தொடர்ந்து அவனை இந்தியாவுக்கு நாடு கடத்த உதவுமாறு சிபிஐயிடம் கர்நாடக போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவனை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு சவூதி அரேபிய அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் கடந்த மே 13-ந் தேதியே சவூதியில் இருந்து இந்தியாவுக்கு பஷி முகமது கொண்டுவரப்பட்டதாகவும் அவனை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவனது மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+