மீன்களுக்கும் கொள்முதல் விலை தேவை- காலவரையற்ற ஸ்டிரைக்கில் மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டதால் அரசே கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மீனவர்கள் சங்கத் தலைவர் போஸ் கூறியதாவது:
ஒரு கிலோ இறால் மீன் ரூ.550க்கும் கணவாய் மீன் ஒரு கிலோ ரூ.250க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீன்களின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துவிட்டது. ரூ150க்குதான் இறால்மீன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதனால் மீனவர்கள் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. எனவே மீன்களின் கொள்முதல் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
ராமேஸ்வரத்தில் மொத்தம் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications