செயல்படாத ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி: சிறப்பாக செயல்படாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து வீட்டுக்கு அனுப்புமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் அலுவலகப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பணிக்கு வந்து குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகிவிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகளின் பணித்திறன், சாதனைகள் குறித்து மாநில அரசுகள் மறுஆய்வு செய்ய வேண்டும். இப்போதுள்ள ஆண்டு மதிப்பீடு அறிக்கை அளிக்கும் நடைமுறையில், "அதிகாரிகளின் செயல்பாடுகள் சராசரி, திருப்தியளிக்கிறது, தகுதியானவர்" என்பன போன்ற மதிப்பீடுகளே வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஒருவரது சாதனைகள், பணித்திறன் உள்ளிட்டவற்றை அறிய முடியவில்லை. சில சமயங்களில் அதிகாரிகளின் நேர்மையான பணி குறித்து அரைகுறையான மதிப்பீடுகளே அறிக்கையாக வருகின்றன. இவற்றின் மூலம் எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது. இதனால் பணிக்கு வந்து 15 ஆண்டுகளோ அல்லது 25 ஆண்டுகளோ அல்லது குறைந்தபட்சம் 50 வயது ஆன அதிகாரிகள் இயல்பாகவே பதவி உயர்வின் மூலம் உயர் பதவியை அடைந்து விடுகின்றனர். அத்தகைய உயர் பதவிகளில் திறமையற்றவர்கள் அமர்ந்துவிடாமல் தடுக்க வேண்டும்.
15 ஆண்டுகள் பணிபுரிந்த அதிகாரிகளின் செயல்பாட்டில் திருப்தி இல்லையென்றால், பொதுமக்களின் நலன் கருதி அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதிகாரிகளின் பணித்திறனை ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை 6 மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications