32 ஈழத் தமிழர்களுடன் வந்த படகை கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா
மெல்போர்ன்: இலங்கையில் இருந்து 39 ஈழத் தமிழர்களை சென்ற படகு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை சென்றடைந்தது. கடந்த வியாழக்கிழமை முதல் ஆஸ்திரேலியாவை சென்றடைந்துள்ள 4-வது அகதிகள் படகு இது.
இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இப்படி அகதிகளாக தஞ்சமடைந்திருக்கின்றனர்.
உயிரைப் பணயம் வைத்து சின்னஞ்சிறிய மீன்பிடி படகில் நெருக்கடியடித்து மாதக் கணக்கில் கடலில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைவோரில் கணிசமானோர் ஈழத் தமிழர்கள். அண்மையில் இப்படி புகலிடம் கோரி வந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் 90 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை சென்றடைந்த அனைவரும் சோதனைகளுக்குப் பிறகு மற்றொரு தீவான கோகோஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமானம் மூலம் அவர்களுக்கு தேவையான பொருட்கள் கோகோஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று வந்த படகில் மட்டும் 39 ஈழத் தமிழர்கள் இருந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications