ரூ.25 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வின் பணிநீக்கம் செல்லாது: சென்னை ஹைகோர்ட்
சென்னை: மின் இணைப்பு வழங்க ரூ.25 லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ. சடையப்பனின் பணிநீக்கம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா பார்த்தநாடு கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சடையப்பன். அவர் கடந்த 1988ம் ஆண்டு மின் இணைப்பு வழங்க ரூ.25 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை 13 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போனது. இறுதியாக கடந்த 2001ம் ஆண்டு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் கே. சர்மா சடையப்பனை பணிநீக்கம் செய்தது செல்லாது என்று கூறி அந்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் வழக்கு விசாரணையை உரிய காலத்தில் நடத்தி முடிக்காதது ஏன் என்று அவர் போலீசாரைக் கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications