காதலை எதிர்த்த தாயை காதலனுடன் சேர்ந்து கொன்ற 16 வயது பெண்
நாசிக்: மகாராஷ்டிராவில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த விதவைத் தாயை காதலுடன் சேர்ந்து கொலை செய்த 16 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சங்கர் நகரைச் சேர்ந்தவர் குர்விந்தர் கௌர் பிர்டி(40). விதவை. அவருடைய 16 வயது மகள் 19 வயது வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த குர்விந்தர் மகளைக் கண்டித்துள்ளார். மேலும் அந்த வாலிபரை இனி சந்தித்து பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குர்விந்தரின் மகள் தாயையே தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
இதையடுத்து தனது காதலனை வீட்டுக் வரச் சொல்லி அனுப்பினார். அந்த வாலிபரும் கடந்த 2ம் தேதி மாலை குர்விந்தரின் வீட்டு்ககு வந்து அவரது வயற்றில் கத்தியால் குத்தினார். பின்னர் அவரை கழுத்தை நெறித்துக் கொன்றார். பிறகு காதலனும், காதலியுமாகச் சேர்ந்த குர்விந்தரின் உடலை காரில் ஏற்றிச் சென்று காசரா காட் பகுதியில் போட்டுவிட்டனர். இந்நிலையில் குர்விந்தரின் மகள் நல்லபிள்ளை போன்று பதர்காளி காவல் நிலையத்திற்கு சென்று தனது தாயை காணவில்லை என்று புகார் தெரிவித்தார். மேலும் தனது தாய் மாமாவிடமும் தனது தாயைக் காணவில்லை என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பெண் ஒருவரின் சடலம் கிடைப்பதைப் பார்த்த காசரா காட் போலீசார் பத்ரகாளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த சடலம் குர்விந்தருடையது தான் என்பது உறுதியானது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குர்விந்தரின் மகளைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தானும், தனது காதலனும் சேர்ந்து தான் கொலை செய்தோம் என்று ஒப்புக் கொண்டார். இதையடு்து அவரும், அவருடைய காதலனும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications