8ல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா துவக்கம்
நெல்லை: கரையாறு சொரி்முத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் கால்நட்டுடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டத்தில் பிரசி்த்தி பெற்ற கோவில்களில் காரையாறு சொரி்முத்து அய்யனார் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஒரு வாரத்திற்கு முன்பே நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சு்ற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி வழிபடுவர். இதையொடடி பல்வேறு இடங்களில் இருந்தும் கோவிலுக்கு 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்தாண்டு திருவிழா நாளை மறுநாள் (8ம் தேதி) காலை 10 மணிக்கு கால் நட்டுடன் தொடங்குகிறது. விழாவின் உச்சத்திருவிழா வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்று கோவிலின் இரு இடங்களில் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.












Click it and Unblock the Notifications