திருவள்ளூர் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகள் பறிமுதல்-2 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூரில் ஒரு குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நிறுவன உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூரை அடுத்த ராஜாஜிபுரம் வி.ஜி.பி. நகரில் வசித்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த 1990ம் ஆண்டு முதல் அரண்வாயல் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இங்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநில வனத்துறையின் அனுமதியுடன் மான் கொம்புகளை கொள்முதல் செய்கிறார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதி பெற்று மான்கொம்புகள் மூலம் கத்திபிடி, நடைகொம்பு பிடி போன்ற பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல், மான்கொம்பு ஏற்றுமதியை மத்திய, மாநில அரசுகள் தடை செய்தது. ஆனால் சுப்பிரமணியம் தனது உரிமைத்தை புதுப்பிக்காமல், தொடர்ந்து மான் கொம்புகளை பதுக்கி வைத்திருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணப்பன் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரூபேஷ்குமார் மீனா, துணை சூப்பிரண்டு பாலச்சந்திரன், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் அரண்வாயலில் உள்ள சுப்ரமணியத்தின் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 20 டன் எடை கொண்ட ரூ.2 கோடி மதிப்புள்ள மான்கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குடோன் உரிமையாளர் சுப்பிரமணியம், மேலாளர் கோதண்டம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications