டீச்சரிடம் ரூ. 8000 லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கிளார்க் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் கிளார்க் ஆக பணியாற்றி வரும் ஜெரால்ட் வசீகரன் என்பவர், ஆசிரியை ஒருவரிடம் ரூ. 8000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
ரெட்டியாபட்டியைச் சேர்ந்தவர் எபனேசர் எஸ்தர். இவர் தனது பணிக்கொடைகள் நிலுவையில் இருப்பது தொடர்பாக மாவட்டகல்வி அதிகாரி அலுவலக கிளார்க் ஜெரால்டை சந்தித்துப் பேசினார். அப்போது ரூ. 8000 கொடுத்தால் அனைத்து நிலுவைத் தொகையையும் உடனடியாக விடுவிப்பதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஸ்தர், லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி ஜெரால்டிடம் பணத்தைக் கொடுத்தார் எஸ்தர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஜெரால்டை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications